கோவை: நெகமம் அருகே பி ஏ பி கிளை வாய்க்காலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: நெகமம் அருகே பி ஏ பி கிளை வாய்க்காலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் வினோத்குமார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட நெகமம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் உள்ள பிஏபி கிளை வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு விரைந்த நெகமம் போலீசார் நேற்று மாலை இறந்த நிலையில் இருந்த வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் வினோத்குமார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட நெகமம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் உள்ள பிஏபி கிளை வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு விரைந்த நெகமம் போலீசார் நேற்று மாலை இறந்த நிலையில் இருந்த வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.