வால்பாறை: விசு பண்டிகை, தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விற்பனை அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வால்பாறை: விசு பண்டிகை, தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விற்பனை அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள எல்லையை ஒட்டி உள்ள தமிழக எல்லைகளில் விசு பண்டிகையும், தமிழகத்தில் தமிழ் புத்தாண்டும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக விசு பண்டிகையின்போது கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள், கணிகொன்ன என்ற மஞ்சள் பூ மற்றும் பூக்கள் மாலைகள் பழங்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கம்.
விசுவுக்கு முதல் நாள் இரவு சாமி அறையை சுத்தம் செய்து ஐந்துமுக விளக்கேற்றி கிருஷ்ணர் படங்களை மாலைகளால் அலங்கரித்து தலை வாழையில் தேங்காய் வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் ஆரஞ்சு திராட்சை பழங்களை வைத்து அலங்காரம் செய்கின்றனர்.
காலையில் எழுந்து குளித்து முடித்து பாரம்பரிய உடை உடுத்தி இரண்டு கைகளால் கண்களை மூடியபடி சாமி அறைக்கு சென்று கிருஷ்ணரை தீபாராதனையுடன் வழிபடுகின்றனர் தொடர்ந்து வீட்டில் உள்ள பெரியோர்களிடம் கைநீட்டம் வாங்குகின்றனர்.
அதன் பின்னர் காலை உணவு உண்டு விழாவை கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சுவாமிக்கு பழங்கள் படைத்து வழிபடுவது வழக்கம்.

இதன் காரணமாக வால்பாறை பகுதியில் பழ கடைகள் பூ கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள எல்லையை ஒட்டி உள்ள தமிழக எல்லைகளில் விசு பண்டிகையும், தமிழகத்தில் தமிழ் புத்தாண்டும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக விசு பண்டிகையின்போது கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள், கணிகொன்ன என்ற மஞ்சள் பூ மற்றும் பூக்கள் மாலைகள் பழங்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கம்.
விசுவுக்கு முதல் நாள் இரவு சாமி அறையை சுத்தம் செய்து ஐந்துமுக விளக்கேற்றி கிருஷ்ணர் படங்களை மாலைகளால் அலங்கரித்து தலை வாழையில் தேங்காய் வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் ஆரஞ்சு திராட்சை பழங்களை வைத்து அலங்காரம் செய்கின்றனர்.
காலையில் எழுந்து குளித்து முடித்து பாரம்பரிய உடை உடுத்தி இரண்டு கைகளால் கண்களை மூடியபடி சாமி அறைக்கு சென்று கிருஷ்ணரை தீபாராதனையுடன் வழிபடுகின்றனர் தொடர்ந்து வீட்டில் உள்ள பெரியோர்களிடம் கைநீட்டம் வாங்குகின்றனர்.
அதன் பின்னர் காலை உணவு உண்டு விழாவை கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சுவாமிக்கு பழங்கள் படைத்து வழிபடுவது வழக்கம்.
இதன் காரணமாக வால்பாறை பகுதியில் பழ கடைகள் பூ கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.