கோவை: கோவையில் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய எஸ்.ஐ.முத்து நள்ளிரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய எஸ்.ஐ.முத்து நள்ளிரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பெண்கள் உட்பட 5 பேர் நேற்று முன்தினம் இரவு 10 .15 மணி அளவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு ரோந்து பணி மேற்கொண்டு இருந்த காட்டூர் எஸ்.ஐ முத்து ஓட்டலுக்குள் புகுந்து லத்தியால் தாக்கியதில் அங்கிருந்த கடை ஊழியர்கள் பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இக்காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். நிலையில் நேற்று இரவு அவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பெண்கள் உட்பட 5 பேர் நேற்று முன்தினம் இரவு 10 .15 மணி அளவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு ரோந்து பணி மேற்கொண்டு இருந்த காட்டூர் எஸ்.ஐ முத்து ஓட்டலுக்குள் புகுந்து லத்தியால் தாக்கியதில் அங்கிருந்த கடை ஊழியர்கள் பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இக்காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். நிலையில் நேற்று இரவு அவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.