கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக குரங்கு அருவி மூடப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வு அறிவித்த பிறகு குரங்கு அருவி திறக்கப்பட்டது. இருப்பினும் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், அருவிக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. இதனால் குரங்கு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது குரங்கு அருவி நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி எஸ்டேட், கவர்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், அருவிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து, அருவி வெறும் பாறைகளாக காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அருவிக்கு தற்போது குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், நோய் கட்டுப்பாடு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக குரங்கு அருவி மூடப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வு அறிவித்த பிறகு குரங்கு அருவி திறக்கப்பட்டது. இருப்பினும் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், அருவிக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. இதனால் குரங்கு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது குரங்கு அருவி நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி எஸ்டேட், கவர்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், அருவிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து, அருவி வெறும் பாறைகளாக காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அருவிக்கு தற்போது குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், நோய் கட்டுப்பாடு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.