உணவகத்தில் வாடிக்கையாளர்களை போலீசார் தாக்கியதற்கு எம் எல் ஏ கார்த்திக் கண்டனம்!

கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை போலீசார் அத்துமீறி தாக்கியதற்கு திமுக எம் எல் ஏ கார்த்திக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை போலீசார் அத்துமீறி தாக்கியதற்கு திமுக எம் எல் ஏ கார்த்திக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக உணவகங்கள், டீ கடைகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி, இரவு 11 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கார்த்திக் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில், “நேற்று(ஏப்ரல் 11) இரவு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் 10.20 மணி அளவில் சிலர் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து கொரோனாவை காரணம் காட்டி, உணவருந்தி கொண்டிருந்த மக்கள் மற்றும் கடை ஊழியர்களை லத்தியால் தாக்கியுள்ளார். இதில் பெண் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு 11 மணி வரை 50 சதவீதம் பேருடன் இயங்க உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடையை மூடுவதற்கு நேரம் இருக்கும்போது கடையை மூடக் கூறி மிரட்டியதும் இல்லாமல், வாடிக்கையாளர்களையும் காவல்துறையினர் தாக்கிய சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...