அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: அரக்கோணத்தில் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: அரக்கோணத்தில் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணத்தை அடுத்த சோமனூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அர்ஜுனன், சூர்யா என்கிற இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த சூர்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகியிருக்கிறது. இன்னொருவர் அர்ஜுனனுக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த இரட்டை கொலை தொடர்பாகஅதிமுகவை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சத்யா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும்,உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...