இந்து முன்னணி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்: வாகனங்கள் தணிக்கை செய்து தனிப்படையினர் தீவிர விசாரணை!

கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை ஒட்டி தனிப்படை அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை ஒட்டி தனிப்படை அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை போத்தனூரிலுள்ள தாயம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (37) உக்கடம் நகர இந்து முன்னணி துணை தலைவர்.

இவர் நேற்று முன்தினம் இரவு, சுந்தராபுரம் சங்கம் வீதி ரோடு சந்திப்பு அருகே செல்லும்போது, பைக்கில் வந்த இருவரில் பின்னால் இருந்தவர், இரும்பு ராடால், இவரது மண்டையில் தாக்கினார்.

அப்போது, காயமடைந்த ராமகிருஷ்ணன். அப்பகுதியிலிருந்த முருகேசன் என்பவரிடம், தன்னை தாக்கியது குறித்து கூறியுள்ளார். முருகேசன், ராமகிருஷ்ணனை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு அருகேயுள்ள 'சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ராமகிருஷ்ணனை தாக்கிய இருவர், சங்கம் வீதி வழியே பொள்ளாச்சி நாட்டிற்குச் சென்று தப்பியது தெரிய வந்தது.

இதையடுத்து, மாநகரில் முக்கிய இடங்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை சுந்தராபுரத்தில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசார், மோப்ப நாய்களின் உதவியுடன், சந்தேகத்திற்கிடமான வாகனங்களை சோதனையிட்டனர்.

இந்த நிலையில், இந்து அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் நடத்தச் சென்றனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியமும் அங்கு வந்தார். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவதாக, போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...