வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க ஸ்டான் மோர் சாலையில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க ஸ்டான் மோர் சாலையில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

வால்பாறை நகரம், காமராஜ் நகர், காந்தி நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புது தோட்டத்திலிருந்து வால்பாறை காமராஜ் நகர் வழியாக ஸ்டேன்மோர் சாலை அருகே நடுமலை ஆற்றில் கலந்து சோலையார் அணைக்கு செல்கிறது.

தற்பொழுது, இந்த காமராஜ் நகர் வழியாக வரும் ஆற்றை மறித்து படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் வரும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் அனைத்தும் படகு குழாமிற்கு வந்து சேருகிறது, இதனால் சிறுவர் பூங்கா வரை கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், படகு குழாமில் கழிவுநீர் செல்வதை தடுக்க மாற்று வழி ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வால்பாறை நகரம், காமராஜ் நகர், காந்தி நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புது தோட்டத்திலிருந்து வால்பாறை காமராஜ் நகர் வழியாக ஸ்டேன்மோர் சாலை அருகே நடுமலை ஆற்றில் கலந்து சோலையார் அணைக்கு செல்கிறது.
தற்பொழுது, இந்த காமராஜ் நகர் வழியாக வரும் ஆற்றை மறித்து படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் வரும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் அனைத்தும் படகு குழாமிற்கு வந்து சேருகிறது, இதனால் சிறுவர் பூங்கா வரை கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், படகு குழாமில் கழிவுநீர் செல்வதை தடுக்க மாற்று வழி ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.