பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒரே நாளில், 26 பேருக்கு கொரோனா தொற்று

பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒரே நாளில், 26 பேருக்கு கொரோனா தொற்று


 கோவை: பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், 394 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, என 

சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பொள்ளாச்சி நகரம், தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களில், கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், வடக்கு ஒன்றியத்தில், ராமபட்டணம், திப்பம்பட்டி பகுதியில் தலா ஒருவர், புளியம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் என மொத்தம், ஐந்து பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தெற்கு ஒன்றியத்தில் கஞ்சம்பட்டி, சீலக்காம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி பகுதியில் தலா ஒருவருக்கும், வஞ்சியாபுரம், பெரியாக்கவுண்டனுார், சின்னாம்பாளையம் பகுதியில் தலா, இரண்டு பேருக்கும் என மொத்தம், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...