கோவையில் 45 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் - மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள்!

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 250க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தான் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவதால் பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா பரவுதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா நோய் தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் போட்டுக்கொள்வது அவசியமானதாகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இத்தடுப்பூசியானது இலவசமாக பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

ஆகவே, பொதுமக்கள் இதில் தனிகவனம் செலுத்தி, கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களையும், தங்கள் சமூகத்தையும் பாதுகாக்கும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்வதால் சுமார் 40 சதவீதம் வரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்,’’ என்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...