பொள்ளாச்சியில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சபரிமாலா கார் கண்ணாடிகள் உடைப்பு - போலீசார் விசாரணை!

கோவை: பொள்ளாச்சியில் திமுகவுக்கு ஆதரவாக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சபரிமாலா கார் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் திமுகவுக்கு ஆதரவாக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சபரிமாலா கார் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜனுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சபரி மாலா தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.



இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி ஒக்கிலிபாளையம் கிராமத்தில் சபரிமாலா பிரச்சாரத்தின் போது அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 2 தரப்பினர் மீதும் வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதனிடையே, சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு முடிவடைந்த நிலையில், ஜோதி நகர் பகுதியில், நேற்று நள்ளிரவு சபரிமாலா தங்கியிருந்த வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.



இது குறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை வைத்தும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...