கோவை: வன்னியருக்கு இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கரை, குரும்பபாளையம் பெருமிழலை குரும்பநாயனார் சமுதாய அறக்கட்டளை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: வன்னியருக்கு இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கரை, குரும்பபாளையம் பெருமிழலை குரும்பநாயனார் சமுதாய அறக்கட்டளை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசால், கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, மிக பிற்பட்டோருக்கான 20 சதவிகித உள் இடஒதுக்கீட்டில், வன்னிய சமுதாயத்தினருக்கு மட்டும் 10.5 சதவிகிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 20 சதவிகித இடஒதுக்கீட்டில் கடந்த 32 ஆண்டுகளாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பயன்பெற்று வந்த குரும்பர் சமுதாயம் உட்பட, 28 சாதியினர் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாமல், வன்னியர்களுக்கு மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்கியதை, பாதிக்கப்பட்ட மற்ற சமுதாயத்தினர் கண்டித்துள்ளனர்.
எனவே, அவசர கதியில் வெளியிடப்பட்ட அரசாணையை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இது தொடர்பாக, ஏற்கனவே மற்ற சமுதாயத்தினர் தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 8க்கு தள்ளிவைத்தார்.
இது தொடர்பான மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசால், கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, மிக பிற்பட்டோருக்கான 20 சதவிகித உள் இடஒதுக்கீட்டில், வன்னிய சமுதாயத்தினருக்கு மட்டும் 10.5 சதவிகிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 20 சதவிகித இடஒதுக்கீட்டில் கடந்த 32 ஆண்டுகளாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பயன்பெற்று வந்த குரும்பர் சமுதாயம் உட்பட, 28 சாதியினர் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாமல், வன்னியர்களுக்கு மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்கியதை, பாதிக்கப்பட்ட மற்ற சமுதாயத்தினர் கண்டித்துள்ளனர்.
எனவே, அவசர கதியில் வெளியிடப்பட்ட அரசாணையை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இது தொடர்பாக, ஏற்கனவே மற்ற சமுதாயத்தினர் தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 8க்கு தள்ளிவைத்தார்.