தேர்தல் விதிமீறல்: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாமரை சின்ன பேஜ் அணிந்து வாக்களிக்க சென்றதால் சர்ச்சை!

கோவை: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாமரை சின்ன பேஜ் அணிந்து வாக்களிக்க சென்றதால் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.


கோவை: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாமரை சின்ன பேஜ் அணிந்து வாக்களிக்க சென்றதால் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர், தமிழக முதலமைச்சர், நடிகர் நடிகைகள் அனைவரும் அந்தந்த தொகுதியில் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட கூடிய பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளரான வானதி சீனிவாசன் தன்னுடைய தொகுதிக்குட்பட்ட வாக்கு மையத்தில் வாக்கு பதிவு செய்தார்.

அப்பொழுது அவர் தேர்தல் விதிமீறல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர் தாமரை சின்னத்தை தன்னுடைய இடது பக்கத்தில் அணிந்து சென்றுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறை படி 100 மீட்டருக்குள் தேர்தல் சின்னத்தை கொண்டு செல்லவோ கையில் எடுத்து சொல்லக்கூடாது. 100 மீட்டருக்கு முன்பாக செய்தியாளர்களை சந்திக்கும் பொழுதும் அந்த பகுதியில் யாரிடமும் வாக்கு சேகரிக்க கூடாது என்பன போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளன. ஆனால், வானதி சீனிவாசன் தன்னுடைய சின்னத்தை அணிந்து வாக்களித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் போட்டி வேட்பாளரான ஜெயக்குமார் கூறுகையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதி முறையின்படி வானதி சீனிவாசன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் கோவையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சத்யபிரதா சாகு விடம் கேட்டபோது முறைப்படி புகார் அளிக்கப் பட்ட உடன் அந்த தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரி விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...