திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்த சந்திரன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவையில் இருந்து திருப்பூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் 6 ஏடிஎம்மில் நிரப்புவதற்காக பணம் கொண்டு சென்றதாக கூறினார்.
ஆனால், ஏடிஎம்மில் நிரப்புவதற்கான பாஸ்வேர்டு இல்லாததால் பணத்தை திருப்பூரில் இருந்து மீண்டும் கோவைக்கு கொண்டு செல்வதாக கூறினார். கோவையில் இருந்து திருப்பூருக்கு வருவதற்கு மட்டும் ஆவணங்கள் இருந்த நிலையில், திருப்பூரில் இருந்து கோவை கொண்டு செல்வதற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை.
எனவே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் ஒப்படைத்தனர்.இரண்டு மணி நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பணம் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால், உரிய ஆவணங்களை காட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்த சந்திரன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவையில் இருந்து திருப்பூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் 6 ஏடிஎம்மில் நிரப்புவதற்காக பணம் கொண்டு சென்றதாக கூறினார்.
ஆனால், ஏடிஎம்மில் நிரப்புவதற்கான பாஸ்வேர்டு இல்லாததால் பணத்தை திருப்பூரில் இருந்து மீண்டும் கோவைக்கு கொண்டு செல்வதாக கூறினார். கோவையில் இருந்து திருப்பூருக்கு வருவதற்கு மட்டும் ஆவணங்கள் இருந்த நிலையில், திருப்பூரில் இருந்து கோவை கொண்டு செல்வதற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை.
எனவே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் ஒப்படைத்தனர்.இரண்டு மணி நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பணம் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால், உரிய ஆவணங்களை காட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.