கோவை: முதியோர் மற்றும் நோயாளிகள் வாக்களிக்க வசதியாக இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை அளிப்பதாக கோவையில் உள்ள தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.
கோவை: முதியோர் மற்றும் நோயாளிகள் வாக்களிக்க வசதியாக இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை அளிப்பதாக கோவையில் உள்ள தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கவிருக்கிறது. வாக்குப்பதிவின் போது தகுதி படைத்த வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால் நோயாளிகள், முதியவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்ல முடியாது என்பதால் பெரும்பாலும் அத்தகையவர்கள் வாக்களிப்பதில்லை.
தனி வாகனம் வைத்துக் கொண்டு சென்று வாக்களிக்க முடியாமல் சிரமப்படும் நோயாளிகள் வாக்களிக்க, நாளை ஒருநாள் மட்டும் கோவையை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் ஒன்று தங்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடுத்து உதவ முன்வந்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தினர் கூறுகையில், “ஏழை எளிய மக்கள் உடல்நல குறைவால் அவதிப்படும் நிலையில் உள்ளனர். அவர்களும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் நாளை ஒரு நாள் எங்கள் வாகனங்களை இலவசமாக வழங்குகின்றோம். இலவச ஆம்புலன்ஸ் சேவையைப் பெற 9994522222 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.