திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3343 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3343 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில்திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி(தனி), பல்லடம், காங்கேயம், தாராபுரம்(தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3343 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8 தொகுதிகளிலும் 137 பேர் களத்தில் உள்ளனர். திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் காங்கயம் ஆகிய மூன்று தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளிலுள்ள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் 297 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அனுப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 17,500 ஊழியர்கள், அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்றனர். மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் மற்றும் மாநகரில் சுமார் 800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.துணை ராணுவப்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மாவட்டம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...