கோவை பாஜக பகிர்ந்த வீடியோ - தண்டு மாரியம்மன் கோவிலுக்குல் வாக்களிப்பது குறித்து பெண்கள் உறுதிமொழி

கோவை: தண்டு மாரியம்மன் சாட்சியாக இந்து மதத்தையும், பெண்களையும் மதிக்காத, எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என விளக்கு பூஜை செய்து பெண்கள் சத்தியபிரமாணம் செய்தது, கோவை பிஜேபி முகநூல் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.



கோவை: தண்டு மாரியம்மன் சாட்சியாக இந்து மதத்தையும், பெண்களையும் மதிக்காத, எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என விளக்கு பூஜை செய்து பெண்கள் சத்தியபிரமாணம் செய்தது, கோவை பிஜேபி முகநூல் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், கோயில் பூசாரி ஒருவர், "என்னுடைய தெய்வத்தையும், நாம் தெய்வமாக போற்றும் பெண்களையும் இழிவுபடுத்தும்,

எந்தவொரு அரசியல் கூட்டணி கட்சிகளுக்கு, இந்த தேர்தல் மட்டுமல்லாது எந்த தேர்தல்களிலும், நான் வணங்கும் குலதெய்வத்தின் சாட்சியாக, நான் நம்பும் தெய்வத்தின் மீது ஆணையாக, இங்கே இருக்கும் தண்டுமாரியம்மன் சாட்சியாக, இங்கே இருக்கும் தெய்வத்தின் அக்னி சாட்சியாக, ஒருபொழுதும் நானும் என்னுடைய குடும்பத்தாரும், என்னை சார்ந்தவர்களும் வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி ஏற்கிறேன், என்கிறார், அதை அங்கு விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களும் அதை வழிமொழிந்தனர்.

இதைப்பற்றி நாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் விசாரித்தபோது, இந்த வீடியோவில் சொல்லக்கூடிய தண்டுமாரியம்மன் இதுவல்ல என்றும். தண்டுமாரியம்மன் கோவில்கள் கொங்கு மண்டலத்தில் நிறைய இடத்தில் இருப்பதால் வேறு எங்காவது நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம், என தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...