கொரோனா பரவலைத் தடுக்க விழாக்களில் கூட்டத்தை தவிர்க்கும்படி மாநகராட்சி வேண்டுகோள்!

கோவை: கொரோனா மீண்டும் தீவிரமாக பரவுவதைத் தடுக்க திருமணங்கள், விஷேசங்களில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் படி கோவை மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


: கோவை: கொரோனா மீண்டும் தீவிரமாக பரவுவதைத் தடுக்க திருமணங்கள், விஷேசங்களில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் படி கோவை மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோவையில் கடந்த ஜனவரி மாதம் வரை கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 250க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தான் 75 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இதனிடையே கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுமக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எனவே பொது இடங்களுக்கு செல்லும் மக்கள், அவ்விடத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அங்குள்ள அனைத்து அலுவலர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். திருமணங்கள் மற்றும் விஷேசங்களில் அதிக அளவில் கூட்டம் சேர்வதை தவிர்த்திட வேண்டும். பொதுமக்கள் சாலைகளில் எச்சில் துப்பாமல் இருக்க வேண்டும்” என்றுதெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...