கோவை மாவட்டத்தில் வாக்கு எந்திரம் வைக்கப்படும் அறையில் தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு!

கோவை: கோவை மாவட்டத்தில் வாக்கு எந்திரம் வைக்கப்படும் ஸ்டிராங் ரூம் எப்படி உள்ளது என்பது குறித்து தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் வாக்கு எந்திரம் வைக்கப்படும் ஸ்டிராங் ரூம் எப்படி உள்ளது என்பது குறித்து தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, மாலை வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு 28 நாட்கள் இடைவெளி உள்ளது.

இந்நிலையில், தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு இயந்திரம் வைத்துப் பாதுகாக்கப்படும் ஸ்ட்ராங் ரூம் எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி (ஜி.சி.டி.,) வளாகத்தை, தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் சுகுமார் டோப்போ ஆய்வு செய்தார். கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் பதிவாகும் ஓட்டுகள், ஜி.சி.டி.,யில் எண்ணப்படும். ஓட்டுப்பதிவுக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, கல்லுாரி வளாகத்தில் உள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' பத்திரப்படுத்தப்பட்டு, அரசியல் கட்சி ஏஜன்ட்டுகள் முன்னிலையில், 'சீல்' வைக்கப்படும்.

பின்னர், மே 2ம் தேதி வரை 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர். 'சிசிடிவி' கேமரா பொருத்தி, மெகா சைஸ் மானிட்டரில் கண்காணிக்கப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கு ஏஜன்ட்டுகள் வருவதற்கு தனி வழி, அலுவலர்கள் செல்வதற்கு தனி வழி ஏற்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், இப்பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் சுகுமார் டோப்போ, தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்மணியம் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையில், ஜன்னல்கள் மூடப்பட்டு, குறுக்காக மரச்சட்டங்களால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா, அத்துமீறி உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என, பார்வையிட்டார். ஏஜன்ட்டுகள், அலுவலர்களுக்கு கழிப்பறைகள் இருக்கின்றனவா என பார்வையிட்ட அவர், தண்ணீர், உணவு ஏற்பாடு செய்ய, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...