கோவை; தேர்தல் விதிமுறையை மீறி கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பூத் சிலிப் விநியோகிப்பதாக அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.
கோவை; தேர்தல் விதிமுறையை மீறி கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பூத் சிலிப் விநியோகிப்பதாக அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நாளை மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது;
"கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் விதி முறைகளுக்கு எதிராக செயல்படுகிறார். உறுதிமொழி கடிதம் என்ற பெயரில் தொகுதி முழுவதும் பூத் சிலிப் வினியோகம் செய்து வருகிறார்.
பூத் சிலிப் வினியோகத்தை உடனடியாக தடுத்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், தேர்தல் விதிகளை மீறியதற்காக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தனது புகாருடன் மயூரா ஜெயக்குமார் விநியோகித்ததாக பூத் சிலிப் ஒன்றையும் ஆதாரமாக கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நாளை மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது;
"கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் விதி முறைகளுக்கு எதிராக செயல்படுகிறார். உறுதிமொழி கடிதம் என்ற பெயரில் தொகுதி முழுவதும் பூத் சிலிப் வினியோகம் செய்து வருகிறார்.
பூத் சிலிப் வினியோகத்தை உடனடியாக தடுத்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், தேர்தல் விதிகளை மீறியதற்காக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தனது புகாருடன் மயூரா ஜெயக்குமார் விநியோகித்ததாக பூத் சிலிப் ஒன்றையும் ஆதாரமாக கொடுத்துள்ளார்.