முன்னெச்சரிக்கையாக மதுபாட்டில்களை பதுக்கி விற்க திட்டமிட்ட இருவர் கைது!

வால்பாறை; வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதை ஒட்டி முன்கூட்டியே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்க திட்டமிட்டிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


வால்பாறை; வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதை ஒட்டி முன்கூட்டியே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்க திட்டமிட்டிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறையில் டாஸ்மாக் மதுக்கடைகள் தேர்தலை முன்னிட்டு நாளை முதல் மூன்று தினங்கள் மூடப்படுகின்றன. இந்நிலையில் இன்று பலர் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வீடுகளில் வைத்து கள்ளசந்தையில் விற்க முயற்சி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் வால்பாறையை அடுத்துள்ள பாலாஜி கோவில் பகுதியிலுள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.



அதில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 141 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் 19 ஹால்ப் பிராந்தி பாட்டில்கள் 20 பீர் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த காட்டு துறை (36),ஆனந்த் (41) இருவரையும் வால்பாறை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...