கோவை; சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் திமுக ஆட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்து விட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கோவை; சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் திமுக ஆட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்து விட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து குறிச்சி பகுதியில் உள்ள என்.பி இட்டேரி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;

“சட்டப்பேரவைத் தேர்தல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு அனுபவத்தை தரக்கூடியது. ஜனநாயகம், சமூக நீதி, சமூக நல்லிணக்கத்தை காக்கக்கூடிய அறப்போராட்டம் தற்போது நடக்கிறது. எதிர்கால தலைமுறையின் நலன் காக்கவும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கவும், தமிழ் தேசியம், பண்பாடு கலாச்சாரத்தை நிலைநிறுத்த திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்தது.

சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள் திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க முடிவு செய்துவிட்டனர் தமிழகத்தில் திமுக கூட்டணி 200க்கும் அதிகமான இடத்தில் வெற்றி பெறும். தமிழக மக்கள், ஆட்சி மாற்றத்தைக் காண காத்திருக்கின்றனர்.

10 ஆண்டு காலம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்,பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், குடியுரிமை சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் போன்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவதாக தெரிவித்ததை அடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.” இவ்வாறு தமிமுன் அன்சாரி பேசினார்.
கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து குறிச்சி பகுதியில் உள்ள என்.பி இட்டேரி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;
“சட்டப்பேரவைத் தேர்தல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு அனுபவத்தை தரக்கூடியது. ஜனநாயகம், சமூக நீதி, சமூக நல்லிணக்கத்தை காக்கக்கூடிய அறப்போராட்டம் தற்போது நடக்கிறது. எதிர்கால தலைமுறையின் நலன் காக்கவும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கவும், தமிழ் தேசியம், பண்பாடு கலாச்சாரத்தை நிலைநிறுத்த திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்தது.
சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள் திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க முடிவு செய்துவிட்டனர் தமிழகத்தில் திமுக கூட்டணி 200க்கும் அதிகமான இடத்தில் வெற்றி பெறும். தமிழக மக்கள், ஆட்சி மாற்றத்தைக் காண காத்திருக்கின்றனர்.
10 ஆண்டு காலம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்,பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், குடியுரிமை சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் போன்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவதாக தெரிவித்ததை அடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.” இவ்வாறு தமிமுன் அன்சாரி பேசினார்.