தேர்தல் விதிமீறல் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய கோவை எஸ் பி உத்தரவு..!

கோவை: தமிழக மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் தலைமையில் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. அதில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பிணையில் வரமுடியாத பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: தமிழக மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் தலைமையில் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. அதில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பிணையில் வரமுடியாத பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், கோவை மாவட்டத்தில் 22 பேர் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.

கோவை வடவள்ளியில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அதிமுக நிர்வாகி சந்திரசேகர், திமுக வேட்பாளர்களுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வெளியான நிலையில், அவர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரை கைது செய்ய வடவள்ளி போலீசார், இன்று சென்றபோது அவர் முன்ஜாமீன் பெற்ற ஆணையை காண்பித்ததால், அவர் கைது செய்யப்படவில்லை, என்று கூறப்படுகிறது.

அதேபோல, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் கடந்த 28ஆம் தேதி திமுகவிற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சபரிமாலா பிரச்சாரத்திற்கு வந்தபோது அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டு தகராறு ஏற்பட்டதாக திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், அதிமுக தரப்பிலும் திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகார்களின் அடிப்படையில் இருதரப்பினர் மீதும் வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், திமுக தரப்பில், திமுக வேட்பாளர் வரதராஜன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று நேற்று கோவை மாவட்ட எஸ்பி உத்தரவின்படி, காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேர்தல் நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...