கோவை: வால்பாறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோகிலா பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை: வால்பாறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோகிலா பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வால்பாறை உருளிகள் எஸ்டேட்டை சேர்ந்த கோகிலா என்பவர் போட்டியிடுகிறார். இரண்டு நாட்களாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் உருளிகள் எஸ்டேட், பழைய வால்பாறை எஸ்டேட், கருமலை எஸ்டேட், பச்சமலை எஸ்டேட் போன்ற பகுதிகளுக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், வால்பாறையில் உள்ள வில்லோனி செட்டில்மெண்ட், நெடுங்குன்றம் செட்டில்மெண்ட், காடம்பாரை செட்டில்மெண்ட் பகுதிக்கு சென்று ஆதிவாசி பழங்குடியினர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காகவும் தொழில் வரி ரத்து செய்யவும் இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த வீடு வழங்கியது போல வால்பாறையில் சொந்த வீடு வழங்கப் பாடுபடுவேன் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், ஆதிவாசி பழங்குடி மக்களை சந்தித்து மின்சாரம் சாலை வசதி வீட்டு வசதி போன்றவை செய்து தருவதாகவும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வால்பாறை உருளிகள் எஸ்டேட்டை சேர்ந்த கோகிலா என்பவர் போட்டியிடுகிறார். இரண்டு நாட்களாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் உருளிகள் எஸ்டேட், பழைய வால்பாறை எஸ்டேட், கருமலை எஸ்டேட், பச்சமலை எஸ்டேட் போன்ற பகுதிகளுக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், வால்பாறையில் உள்ள வில்லோனி செட்டில்மெண்ட், நெடுங்குன்றம் செட்டில்மெண்ட், காடம்பாரை செட்டில்மெண்ட் பகுதிக்கு சென்று ஆதிவாசி பழங்குடியினர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காகவும் தொழில் வரி ரத்து செய்யவும் இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த வீடு வழங்கியது போல வால்பாறையில் சொந்த வீடு வழங்கப் பாடுபடுவேன் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், ஆதிவாசி பழங்குடி மக்களை சந்தித்து மின்சாரம் சாலை வசதி வீட்டு வசதி போன்றவை செய்து தருவதாகவும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.