கோவை; தேர்தல் காலத்தைப் பயன்படுத்தி பண வசூலில் ஈடுபட்ட மாநகர காவலர்கள் இருவர் மீது வந்த புகாரை அடுத்து அந்த இருவரையும் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை; தேர்தல் காலத்தைப் பயன்படுத்தி பண வசூலில் ஈடுபட்ட மாநகர காவலர்கள் இருவர் மீது வந்த புகாரை அடுத்து அந்த இருவரையும் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முருகானந்தம், சரவணம்பட்டி போலீசில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ரங்கநாதன் ஆகிய இருவரும் தேர்தலை பயன்படுத்தி பண வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக உளவுத்துறை மூலமாக காவல்துறை ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மாநகர ஆணையர் இன்று அதிரடியாக இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசாரிடையே பதட்டத்தையும் பரபரப்பையும் உருவாகியுள்ளது.
கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முருகானந்தம், சரவணம்பட்டி போலீசில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ரங்கநாதன் ஆகிய இருவரும் தேர்தலை பயன்படுத்தி பண வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக உளவுத்துறை மூலமாக காவல்துறை ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மாநகர ஆணையர் இன்று அதிரடியாக இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசாரிடையே பதட்டத்தையும் பரபரப்பையும் உருவாகியுள்ளது.