கோவையின் புதிய எஸ்.பி. செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு..!

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட செல்வ நாகரத்தினம் இன்று கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.


கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட செல்வ நாகரத்தினம் இன்று கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், தொடர்ந்து மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய காவல்துறை ஆணையர், சுமித் சரண் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாற்றம் செய்யப்பட்டு புதிய சிட்டி கமிஷனராக டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் ஆட்சியராக நாகராஜன் பதவியேற்றனர்.

அதைத்தொடர்ந்து, அதிரடி மாற்றமாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி ஆக இருந்த தினகரன் மாற்றப்பட்டு கோவை மாவட்டத்தின் முன்னாள் காவல் ஆணையர் அமல்ராஜ் பணியமர்த்தப்பட்டார். அதேபோல கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த கோவை மாவட்ட எஸ்.பி அருளரசு மாற்றம் செய்யப்பட்டு புதிய எஸ்.பியாக செல்வ நாகரத்தினம் பணியமர்த்தப்பட்டார்.

அதன்படி, புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட செல்வ நாகரத்தினம் இன்று கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றங்கள் தடுக்கப்படும், என கூறினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...