ஜாதி, மத பிரச்சனைகளுக்கு அதிமுக ஆட்சியில் ஒரு துளியும் இடமளிக்க மாட்டோம், அமைச்சர் வேலுமணி வணிகர்களிடம் உறுதி

கோவை: அமைதியான தமிழகத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோவை வணிகர்களிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கோவை: அமைதியான தமிழகத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோவை வணிகர்களிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில் சமீபத்தில் பாஜகவின் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உபி முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் வந்தபோது, பாஜகவினர் கடைகளை அடைக்கச் சொல்லியும், கற்களை கடைகள் மீது வீசி, கோஷங்களை எழுப்பியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், கோவையில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்ற அதே நாள், மக்கள் நீதி மையத்தின் தலைவர் மற்றும் தெற்கு தொகுதி வேட்பாளர், கமல்ஹாசன் நேரில் சென்று பாதிக்கபட்ட கடை உரிமையாளரை சந்தித்து ஆறுதல் கூறினார்.



இந்த நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று கோவை பெரிய கடை வீதியில் உள்ள வியாபார பெருமக்களையும், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை எந்தவிதமான ஜாதி, மத, பிரச்சனைகளுக்கும் அதிமுக ஆட்சியில் ஒரு துளியும் இடமளிக்க மாட்டோம், என வணிகர்களிடம் உறுதி தெரிவித்துள்ளார். குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அனைவரும் சகோதரத்துவத்துடன் பாதுகாப்பாக வாழ்வதற்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வணிகர்களிடம் கூறியுள்ளார்.



மேலும், எந்தச் சூழ்நிலையிலும் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் கோவை மாவட்டத்தில் ஒரு போதும் நடைபெற அனுமதிக்க மாட்டோம். அமைதியான கோவைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...