கோவை: கவுண்டம்பாளையம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மநீம வேட்பாளர் சுரபி பங்கஜ் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை: கவுண்டம்பாளையம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மநீம வேட்பாளர் சுரபி பங்கஜ் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரபி பங்கஜ் கடந்த 12 நாட்களாக 400 கி.மீ தூரம் வரை நடந்தே சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

இன்றும் சுரபி பங்கஜ் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட என்ஜிஓ காலனி, செங்காளிபாளையம், இடிகரை போன்ற பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்குச் சேகரிப்பின்போது, “கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் ஏற்பாடு செய்து தரப்படும்.

நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் படிப்பைத் தொடர முடியாமல் போனால், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். மழை, வெள்ளம், நோய்த்தொற்று போன்ற இக்கட்டான காலங்களில் விரைந்து செயல்பட்டு தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று உறுதி அளித்தார்.
கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரபி பங்கஜ் கடந்த 12 நாட்களாக 400 கி.மீ தூரம் வரை நடந்தே சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்றும் சுரபி பங்கஜ் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட என்ஜிஓ காலனி, செங்காளிபாளையம், இடிகரை போன்ற பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்குச் சேகரிப்பின்போது, “கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் ஏற்பாடு செய்து தரப்படும்.
நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் படிப்பைத் தொடர முடியாமல் போனால், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். மழை, வெள்ளம், நோய்த்தொற்று போன்ற இக்கட்டான காலங்களில் விரைந்து செயல்பட்டு தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று உறுதி அளித்தார்.