கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அரசியல் கட்சியினர் காண தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை அனைத்து அரசியல் கட்சியினரும் முறையாக பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக, தற்போது பரவலை தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பொது இடங்களில் பிரச்சாரம் செய்யும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.
மேலும், பொது கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுக்கூட்டங்களில் பங்கேற்பாளர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் செய்யவேண்டும். எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் ஜாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கிடையே வெறுப்பையும் ஆவேசத்தையும் தூண்டுகிற அல்லது அதிகப்படுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் நடந்த உத்தேசித்த கூட்டங்களில் மற்றும் நாள் நேரம் ஆகி விவரங்களை முன்கூட்டியே தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெறவேண்டும். வாக்காளர்கள் தவிர தேர்தல் ஆணையத்தால் உரிய அனுமதி பெறாதவர்கள் எவரும் வாக்குச் சாவடிக்குள் செல்லக்கூடாது.
மேலும், தேர்தல் நடைமுறைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் வேட்பாளர்கள் அவர்கள் முகவர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் செய்யலாம். அனைத்து தேர்தல் நடைமுறை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது வாக்குப்பதிவு நாளன்று எல்லா அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் தேர்தல் அலுவலர்கள் உடன் ஒத்துழைத்து அமைதியாகவும் நல்ல முறையில் தேர்தல் நடத்தி முடிக்கவும் வாக்காளர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் வாக்களிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அரசியல் கட்சியினர் காண தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை அனைத்து அரசியல் கட்சியினரும் முறையாக பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக, தற்போது பரவலை தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பொது இடங்களில் பிரச்சாரம் செய்யும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.
மேலும், பொது கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுக்கூட்டங்களில் பங்கேற்பாளர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் செய்யவேண்டும். எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் ஜாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கிடையே வெறுப்பையும் ஆவேசத்தையும் தூண்டுகிற அல்லது அதிகப்படுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் நடந்த உத்தேசித்த கூட்டங்களில் மற்றும் நாள் நேரம் ஆகி விவரங்களை முன்கூட்டியே தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெறவேண்டும். வாக்காளர்கள் தவிர தேர்தல் ஆணையத்தால் உரிய அனுமதி பெறாதவர்கள் எவரும் வாக்குச் சாவடிக்குள் செல்லக்கூடாது.
மேலும், தேர்தல் நடைமுறைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் வேட்பாளர்கள் அவர்கள் முகவர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் செய்யலாம். அனைத்து தேர்தல் நடைமுறை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது வாக்குப்பதிவு நாளன்று எல்லா அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் தேர்தல் அலுவலர்கள் உடன் ஒத்துழைத்து அமைதியாகவும் நல்ல முறையில் தேர்தல் நடத்தி முடிக்கவும் வாக்காளர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் வாக்களிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.