திருப்பூர்: மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர், நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உறுதி தெரிவித்தார்.
திருப்பூர்: மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றபின்னர், நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உறுதி தெரிவித்தார்.
திருப்பூர் தெற்கு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் நொய்யல் வீதியில்பரப்புரையில் ஈடுபட்டார்.
பரப்புரையின்போது மக்கள் மத்தியில் தயாநிதி மாறன் பேசியதாவது;

“நீட் நுழைவுத் தேர்வு காரணமாக மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்ற உங்கள் குழந்தைகளின் விருப்பமும் கனவும் பறிபோய் விட்டது.

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான நடவடிக்கையை கண்டிப்பாக மேற்கொள்வார். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நம் பிள்ளைகளின் எதிர்கால பட்டப்படிப்பை கேள்விக்குள்ளாக்கும்சூழலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலை மாற திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.” இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்
திருப்பூர் தெற்கு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் நொய்யல் வீதியில்பரப்புரையில் ஈடுபட்டார்.
பரப்புரையின்போது மக்கள் மத்தியில் தயாநிதி மாறன் பேசியதாவது;
“நீட் நுழைவுத் தேர்வு காரணமாக மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்ற உங்கள் குழந்தைகளின் விருப்பமும் கனவும் பறிபோய் விட்டது.
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான நடவடிக்கையை கண்டிப்பாக மேற்கொள்வார். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நம் பிள்ளைகளின் எதிர்கால பட்டப்படிப்பை கேள்விக்குள்ளாக்கும்சூழலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலை மாற திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.” இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்