வாழ்வின் அடையாளம் உதய சூரியன் மட்டும்தான் என வ.ம.சண்முகசுந்தரம் உருக்கம்!

கோவை: உதய சூரியன் மட்டுமே தன் வாழ்வின் அடையாளம் என கோவை வடக்கு திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் உருக்கமாகப் பேசியுள்ளார்.


கோவை: உதய சூரியன் மட்டுமே தன் வாழ்வின் அடையாளம் என கோவை வடக்கு திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் உருக்கமாகப் பேசியுள்ளார்.



கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி வ.ம. சண்முகசுந்தரம் வடவள்ளி பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து திருவள்ளுவர் நகர், பி.என்.ஆர். நகர், உள்ளிட்ட 16 -வது வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரித்தார்.

அப்போது மக்கள் மத்தியில் வ.ம.சண்முகசுந்தரம் பேசியதாவது;

“ஒருவர் சொல்லிக் கொடுத்து என் பெயர் தெரிய வேண்டியது இல்லை. உதயசூரியன் சின்னத்தில் நான் போட்டியிடுகின்றேன். சூரியனை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.

மாதாமாதம் வாங்கும் பேட்டா பணத்திற்காக சிலர் எதை எதையோ பேசி வருகிறார்கள். எனது பரம்பரை சொத்து மதிப்பு என்ன என்று தேர்தல் அலுவலகத்தில் கொடுத்துள்ளேன். கடந்த நான்கு வருடத்தில் திடீர் பணக்காரன் ஆனவன் நான் அல்ல. வடவள்ளியில் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகாலம் வளர்ச்சியை கொடுத்துள்ளேன் என்று பேசி வருகின்றனர். உங்களது ஐந்து தலைமுறைக்கு மட்டும் சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள்.

எனவே இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இந்த மண்ணின் மைந்தனான எனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். என் வாழ்நாளின் அடையாளம் உதயசூரியன் சின்னம் மட்டும்தான்.” இவ்வாறு வ.ம.சண்முக சுந்தரம் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...