கோவை: கோவையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இன்று ஒரே நாளில் ரூ.16.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இன்று ஒரே நாளில் ரூ.16.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மேட்டுப்பாளையத்தில் ரூ.1.50 லட்சம், கவுண்டம்பாளையத்தில் 97 ஆயிரம், தொண்டாமுத்தூரில் ரூ.1.03 லட்சமும் இன்று பறிமுதல் செய்தனர்.
இதேபோல சிங்காநல்லூரில் ரூ.1 லட்சம், கிணத்துக்கடவு பகுதியில் ரூ. 3.98 லட்சம், வால்பாறையில் ரூ.2.25 லட்சம், பொள்ளாச்சியில் ரூ.5.56 லட்சத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ. 53.09 கோடி மதிப்பில் பணம், தங்க நகைகள், மதுபாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.16.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மேட்டுப்பாளையத்தில் ரூ.1.50 லட்சம், கவுண்டம்பாளையத்தில் 97 ஆயிரம், தொண்டாமுத்தூரில் ரூ.1.03 லட்சமும் இன்று பறிமுதல் செய்தனர்.
இதேபோல சிங்காநல்லூரில் ரூ.1 லட்சம், கிணத்துக்கடவு பகுதியில் ரூ. 3.98 லட்சம், வால்பாறையில் ரூ.2.25 லட்சம், பொள்ளாச்சியில் ரூ.5.56 லட்சத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ. 53.09 கோடி மதிப்பில் பணம், தங்க நகைகள், மதுபாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.16.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.