வெப்ப மண்டல தாவர உயிரிகளின் நிலையான பயன்பாடு குறித்து சர்வதேச மாநாடு

அதிகரித்து வரும் ஆற்றல் தேவை மற்றும் படிம எரிபொருட்களின் வேகமான மறைவின் காரணமாக நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் இருந்து ஆற்றல் அபிவிருத்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

இவற்றை அடிப்படையாகக் கொண்டு வெப்ப மண்டல தாவர உயிரிகளின் நிலையான பயன்பாடு உயிரி செயலூக்கி, உயிரி தயாரிப்பு மற்றும் உயிரி சுத்திகரிப்பு என்னும் சர்வதேச மாநாடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வியாழன் (இன்று) மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ரேடிசான் புளு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கு.ராமசாமி, அமைப்புச் செயலாளர் முனைவர் உ.சிவகுமார் ஆகியோர் தலைமைதாங்க உள்ளனர்.

இந்த மாநாடானது, சர்வதேச   மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களைக் கொண்ட அறிவியல் பூர்வமான மன்றத்தினை வழங்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



மாநாட்டின் ஆய்வுப் பகுதிகளாக உயிரி மற்றும் செல்முறை பொறியியல், உயிரி செயலூக்கி மற்றும் தீவிர நொதி, நொதித்தல் மற்றும் வளர்சிதை மாற்ற பொறியியல் மற்றும் உயிரித் தயாரிப்பு உணவு மற்றும் மருந்து ஆகியவை உள்ளன.

இதில், உலக அளவில் 400 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தியா, ஸ்ரீலங்கா, ரஷ்யா, ஸ்வீடன், அயர்லாந்து மற்றும ஐக்கிய நாடுகளிலிருந்து வரும் பேச்சாளர்கள் வெப்ப மண்டல உயிரிகளின் பயன்பாட்டில் உள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்து பேசவுள்ளனர். 



இந்த சர்வதேச மாநாடானது கல்லூரி, பல்கலைக் கழகம், ஆய்வு நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் இளைய மற்றும் திறமை மிகுந்த ஆய்வாளர்கள் பங்களிப்பதையும், தொடர்புகொள்வதையும் ஊக்குவிக்கிறது.




Newsletter

கோவை மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகள் - செந்தில் பாலாஜி பாராட்டு

கோவை வெள்ளலூரில் உள்ள Agaram Kids Montessori பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகளை செய்து சா...

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...

ஓணம்பாளையம் குடியிருப்பில் கஞ்சா செடி பறிமுதல் - வட மாநில தொழிலாளர்கள் விசாரணையில்

வடவள்ளி அருகே ஓணம்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் 4 அடி உயர கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டது. கா...

தேர்தல் சின்ன விவகாரம்: குப்பை சேகரிப்பு விசில் ஒலிக்கத் தடை கோரி மனு

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும்போது அடிக்கும் விசில், அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம் என்ப...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி மாமன்ற உறுப்பினர் மனு: கோவை ஆட்சியருக்கு சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பின்போது தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் விசில், மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல்...