தேர்தல் சின்ன விவகாரம்: குப்பை சேகரிப்பு விசில் ஒலிக்கத் தடை கோரி மனு

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும்போது அடிக்கும் விசில், அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம் என்பதால், அதற்குத் தடை விதிக்கக் கோரி மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருக்கு மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி, மறுமலர்ச்சி திமுக மாமன்ற குழுத் தலைவரும், 26-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சித்ரா வெள்ளியங்கிரி, மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar மற்றும் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran ஆகியோருக்கு மார்ச் 21-ம் தேதி மனு அளித்துள்ளார்.






தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதைச் சுட்டிக்காட்டி அவர் அனுப்பியுள்ள மனுவில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அரசியல் கட்சிகளின் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அனைத்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் மாநகராட்சிப் பணியாளர்களால் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.






இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், குறிப்பாக 26-வது வார்டில், தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகக் குப்பை சேகரிக்க வரும்போது விசில் அடித்து பொதுமக்களை அழைப்பது வழக்கமாக உள்ளது. இந்த விசில் என்பது மற்றொரு அரசியல் இயக்கத்தின் தேர்தல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பணியாளர்கள் அதனைப் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணானது என சித்ரா வெள்ளியங்கிரி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.






தேர்தல் காலத்தில் அரசு இயந்திரம் எந்த வகையிலும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நிலையில், தினசரி குப்பை சேகரிப்பின் போது விசில் ஒலி எழுப்புவது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் இந்த விசில் ஒலியை தொடர்ந்து கேட்பதால், மறைமுகமாக அந்த அரசியல் கட்சியின் தேர்தல் சின்னத்தை நினைவில் கொள்ள வைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு குப்பை சேகரிக்கும்போது விசில் பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி திமுக சார்பில் சித்ரா வெள்ளியங்கிரி வலியுறுத்தியுள்ளார். அதற்கு மாற்றாக, ஒலிபெருக்கிகள் மூலம் குப்பை சேகரிக்கும் வாகனம் வந்துள்ளதை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் புதிய முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.


தேர்தல் நியாயமாகவும் நடுநிலையுடனும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அரசு பணியாளர்கள் அறியாமல் கூட தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் மறுமலர்ச்சி திமுக மாமன்ற குழுத் தலைவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...