திருப்பூர்: அ.தி.மு.க. கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க. நிலைப்பாடு என்ன என்பது குறித்து என்று பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருப்பூர்: அ.தி.மு.க. கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க. நிலைப்பாடு என்ன என்பது குறித்து என்று பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருப்பூரில்மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வளையங்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அரசின் சாதனைகள் ஒவ்வொரு மாவட்டமாக, ஒவ்வொரு கிராமமாக சென்றுள்ளதாகவும், ஒவ்வொரு தனி மனிதனையும் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மு.க.அழகிரி குறித்து கேள்வி எழுப்பியபோது, அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றார். கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, கட்சியின் நிலைப்பாட்டை தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்
திருப்பூரில்மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வளையங்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அரசின் சாதனைகள் ஒவ்வொரு மாவட்டமாக, ஒவ்வொரு கிராமமாக சென்றுள்ளதாகவும், ஒவ்வொரு தனி மனிதனையும் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மு.க.அழகிரி குறித்து கேள்வி எழுப்பியபோது, அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றார். கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, கட்சியின் நிலைப்பாட்டை தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்