ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவர் மன்ற பதவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 39 கிளப்புகளின் மாணவத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் பதவியேற்றனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் R.S.மாருதி சிறப்புரையாற்றினார்.


Coimbatore: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. S.N.R.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr.சுந்தர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கினார்.






கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் Dr.P.L.சிவக்குமார் மாணவர் மன்ற பதவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். B.Com. C.A. துறை மூன்றாம் ஆண்டு மாணவி R.சங்கீதா மாணவர் மன்ற தலைவராகவும், B.Sc கணினி அறிவியல் Cyber Security துறை மூன்றாம் ஆண்டு மாணவி U.ஹேமாஸ்ரீ துணைத் தலைவராகவும் பதவியேற்றனர். B.Sc IT துறை இரண்டாம் ஆண்டு மாணவி K.காவியா செயலாளராகவும், BCA துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ருத்ர சர்மா துணைச் செயலாளராகவும் பதவியேற்றனர். இதேபோல் கல்லூரியில் செயல்படும் 39 கிளப்புகளின் மாணவத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.




விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போதைய ரோட்டரி கோவை மாவட்ட ஆளுநருமான Rotarian R.S.மாருதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது: "நான் இந்த கல்லூரியில் படிக்கும் போது பெரிய அளவில் வெளி உலகம் தெரியாது. வேலை வாய்ப்புகள் குறைவு. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை. ஆனால், தற்போது நான் இந்த கல்லூரியைப் பார்க்கும்போது அபரிவிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. இங்கு கல்விச்சூழல் பலமடங்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது."






"உங்களுடைய திறனுக்கேற்ற 39 கிளப்புகள் இந்த கல்லூரியில் செயல்படுகின்றன. நீங்கள் மிகச் சரியாக பயன்படுத்தி உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். AI போன்ற தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி இன்னும் நாம் பெரிய உயரங்களைத் தொட வேண்டும். தலைமைத்துவத்தில் எண்ணற்ற சவால்கள் நிறைந்துள்ளன. நீங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு சவாலையும் உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பாக அணுகி முன்னேற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.




மேலும் பேசிய அவர், "நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதை முழுமையாக செய்பவராக இருக்க வேண்டும். நம் கல்விக்கேற்ற பணியைத் தேர்வு செய்து அதில் வெற்றி பெற வேண்டும். நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை, கிடைக்கும் வாய்ப்புகளைக் கைவசமாக்கி மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். யாரையும் நம்பி இல்லாமல் தன் கையே தனக்கு உதவி என்ற நோக்கில் தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும்" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.




"நம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கல்லூரி உங்கள் வாழ்க்கையின் பெரிய இலக்கைத் தொட முழுமையாக ஆதரவு தரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்" என்று அவர் குறிப்பிட்டார்.




முன்னதாக, B.Com. C.A. துறைத்தலைவர் R.கீதா வரவேற்றார். முடிவில் தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் N.சுமதி நன்றி கூறினார். இவ்விழாவில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...