மேட்டுப்பாளையம் - உதகை இடையே மீண்டும் மலை ரயில் இயக்கம்!

கோவை: மேட்டுப்பாளையம் - உதகை இடையே இன்றுமுதல் வழக்கமான சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலை ரயில் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.


கோவை: மேட்டுப்பாளையம் - உதகை இடையே இன்றுமுதல் வழக்கமான சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலை ரயில் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

ஆங்கிலேயர் காலத்தில் 1989ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரைமலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி இயற்கையான பசுமையான சூழலில் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக கல்லாறு, அடர்லி, ரன்னிமேடு குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் வழியாக 46 கி.மீ தூரத்தைக் கடந்து ரயில் உதகை செல்கிறது. இந்த மலை ரயில் பாதையின் இடையே 19.50 கி.மீ தூரம் பல்சக்கரபாதையும், 209 வளைவுகள், 16 ரயில் குகைகள் மற்றும் 250 பாலங்களும் உள்ளன.

அடர்ந்த வனப்பகுதியில் ரயில் செல்லும்போது காட்டெருமை, காட்டுயானை, கரடி, சிறுத்தை, புள்ளிமான், கடமான், வரையாடு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் மட்டுமல்லாமல் நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து ரசித்து செல்லலாம். இதனால் இந்த ரயிலில் பயணம் செய்ய உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளனமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் மலை ரயிலுக்கு சர்வதேச கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவால் உலக பழமையான கலாச்சார இடங்களில் ஒன்றாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் மலை ரயில் 9 மாதங்களுக்குப் பின் இன்று (வியாழக்கிழமை) முதல் வழக்கமான சாதாரண பழைய கட்டணத்தில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கு மலை இயக்கப்பட்டது. அத்துடன் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளுடனும், குன்னூர் முதல் உதகை வரை 5 பெட்டிகளுடனும் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக உதகைக்கு பகல் 11.55 மணிக்குச் செல்லும். மீண்டும் உதகையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடையும். இதில் பயணம் செய்ய இணைய தளம் வழியாக டிக்கெட் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...