ஒப்பந்தப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுவிஷயத்தில் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுவிஷயத்தில் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை மாநகராட்சியில் 32 அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை ஒப்பந்ததாரர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



இதுகுறித்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் கூறுகையில்,`கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. ஊரடங்கில் பல துன்பங்களை அனுபவித்துவிட்டோம். அதேபோல இப்போதும் சம்பளம் பாக்கி காரணமாக துன்பங்களை அனுபவித்து வருகிறோம். இந்த விசயத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்றார்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், `ஒப்பந்ததாரர்களிடம் ஒவ்வொரு மாதமும் 22-ம் தேதி முதல் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கான சம்பளத்தை வழங்கி விடுகிறோம். ஒப்பந்ததாரர்கள் சிலர் தாமதப்படுத்துகின்றனர். இதனால் புகார் எழுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...