வாசன் பிறந்த நாள் விழாவில், 2 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு புடவை!

கோவை: கோவையில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவையொட்டி 2 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவையில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவையொட்டி 2 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா கோவை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது.



கவுண்டம்பாளையம் பகுதியில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் த.மா.கா. துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை தங்கம் 2 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். அத்துடன் த.மா.கா. கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

விழாவுக்கு மாநில துணைத் தலைவர் குனியமுத்தூர் எம்.ஆறுமுகம், கோவை மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.வி.வாசன், கோவை புறநகர் வடக்கு மாவட்டத் தலைவர் அன்னூர் கே.ராமலிங்கம், கோவை புறநகர் தெற்கு மாவட்டத் தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலச் செயலாளர்கள் பொன்.ஆனந்தகுமார், சி.ஏ. ராஜ்குமார் மற்றும் டி.செல்வராஜ், கட்சி பிரமுகர்களான சி.ஆர்.ரவிச்சந்திரன், எஸ்.பி.சாமி, சுகுமார், மதிபாலா குமார், எஸ்.ஆர்.கண்ணன், சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

விழாவில் இளைஞரணி மாநில துணைத்தலைவர் சி.பி.அருண் பிரகாஷ், மாணவரணி மாநில துணைத் தலைவர் அஸ்வின், மாணவரணி மாநில பொதுச்செயலாளர் சோபின் மற்றும் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ரபீக், சிவராஜ், ராதாகிருஷ்ணன், சுனில், அய்யாசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...