2020 - 2021ம் ஆண்டுக்கான கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு 2020 - 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு 2020 - 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை ஆடிஸ் தெருவில் உள்ள மன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமது உயிரையும் துச்சமாக கருதி மக்கள் பணியாற்றி அதனால் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த பத்திரிக்கையாளர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, 2020 - 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மன்றத்தின் தலைவராக தங்கராஜா, செயலாளராக ஏ.ஆர்.பாபு, பொருளாளராக முத்துப்பாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல் துணைத்தலைவர்களாக பேச்சிக்குமார், பாலதண்டாயுதம், இணை செயலாளர்களாக மனோகரன், சீனிவாசன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக சங்கீதா, ரமேஷ், ரகுபதி, கிருபாகரன், ரவிக்குமார், நித்தின் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக முன்னாள் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...