திருப்பூர்: நிலுவை சம்பளத் தொகையை வழங்கக் கோரி திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் திறப்பாளர்கள் மண்டல அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: நிலுவை சம்பளத் தொகையை வழங்கக் கோரி திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் திறப்பாளர்கள் மண்டல அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் நான்கு மண்டலங்கள் உள்ளன. அதில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களாக 105 பேர் குடிநீர் திறப்பாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் 4,705 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஏழு மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் மாநகராட்சி 3-வது மண்டலம் அலுவலக நுழைவாயில் முன்பு 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட குடிநீர் திறப்பாளர்கள் 30 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சம்பளம் முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் நான்கு மண்டலங்கள் உள்ளன. அதில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களாக 105 பேர் குடிநீர் திறப்பாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் 4,705 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஏழு மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் மாநகராட்சி 3-வது மண்டலம் அலுவலக நுழைவாயில் முன்பு 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட குடிநீர் திறப்பாளர்கள் 30 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சம்பளம் முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.