டெங்கு காய்ச்சல் குறித்து பீதியடைய வேண்டாம்: டீன் காளிதாஸ் வேண்டுகோள்!

கோவை: டெங்கு காய்ச்சல் குறித்து பீதியடைய வேண்டாம் என்று டீன் காளிதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை: டெங்கு காய்ச்சல் குறித்து பீதியடைய வேண்டாம் என்று டீன் காளிதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன என்பது குறித்து அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறியதாவது:-

கோவையில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே தண்ணீரை காய்ச்சிக் குடிக்கவேண்டும். கோவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பகல் இரவு நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. மழை மற்றும் வெயில் மாறி மாறி வருவதால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். டெங்கு காய்ச்சல் ஏ.டி.எஸ் கொசு மூலம் பரவுகிறது. கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு நோயின் தாக்கம் இல்லை. இந்த டெங்கு கொசுக்கள் மழைநீர் மற்றும் சுத்தமான நீரில் தங்கி குஞ்சு பொரித்து தங்களது இனத்தைப் பரப்புகிறது. எனவே வீடுகளில் மழைநீரைத் தேக்கும் வகையில் பழைய டயர், ஆட்டு உரல், உடைந்த பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை போட்டு வைக்கக்கூடாது. மேலும் குடிநீரை மூடி வைக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

காய்ச்சல், கடுமையான தலைவலி கண் வலி, தசை மற்றும் மூட்டு வலி, நாக்குச் சுவையின்மை, பசியின்மை, குமட்டல், வாந்தி போன்றவை டெங்கு பாதிப்பின் அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று உரிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிலவேம்பு கசாயம் குடிப்பது நல்லது.

இவ்வாறு டீன் காளிதாஸ் கூறினார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...