கோவை: சீமானைக் கண்டித்து கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கோவை: சீமானைக் கண்டித்து கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கோவையில் மாநகர் பகுதி முழுவதும் நடிகர் விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அண்மையில் சீமான் செய்தியாளருக்கு அளித்த பேட்டியின்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்க வேண்டுமெனவும் விஜய் குறித்த கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டிக்கும் விதமாக சமூக வலைத்தளமான டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களில் சீமானுக்கு எதிரான ஹேஸ் டேக்குகளைப் பரப்பி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சீமானைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதில் சீமான் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி வரும் சூழலில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றதாகவும், ஆனால் நடிகர் விஜய் ரசிகர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாகவும், நடிகர் விஜய் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் சீமானுக்கு இல்லை எனவும் கூறியுள்ளனர். எனவே, உடனடியாக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வாக்கியங்களை வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கோவையில் மாநகர் பகுதி முழுவதும் நடிகர் விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அண்மையில் சீமான் செய்தியாளருக்கு அளித்த பேட்டியின்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்க வேண்டுமெனவும் விஜய் குறித்த கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டிக்கும் விதமாக சமூக வலைத்தளமான டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களில் சீமானுக்கு எதிரான ஹேஸ் டேக்குகளைப் பரப்பி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சீமானைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதில் சீமான் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி வரும் சூழலில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றதாகவும், ஆனால் நடிகர் விஜய் ரசிகர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாகவும், நடிகர் விஜய் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் சீமானுக்கு இல்லை எனவும் கூறியுள்ளனர். எனவே, உடனடியாக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வாக்கியங்களை வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.