முதல்வர் குறித்த ஊழல் புகார் பொய்யாக இருந்தால் தி.மு.க மீது வழக்கு தொடரலாம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

கோவை: முதல்வரின் ஊழல் குறித்து ஆளுநரிடம் தி.மு.க கொடுத்த புகார் பொய்யாக இருந்தால், தி.மு.க மீது வழக்கு தொடரலாம் என்று பொள்ளாச்சியில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.


கோவை: முதல்வரின் ஊழல் குறித்து ஆளுநரிடம் தி.மு.க கொடுத்த புகார் பொய்யாக இருந்தால், தி.மு.க மீது வழக்கு தொடரலாம் என்று பொள்ளாச்சியில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

பொள்ளாச்சியில் தி.மு.க நெசவாளர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது கலைஞர் கருணாநிதி மீதும், அமைச்சர்கள்மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா? என அ.தி.மு.கவிடம் சவாலாகக் கேட்கிறோம். சர்க்காரியா கமிஷனில் ஊழல் எனக் கூறிய எம்.ஜி.ஆர் சாட்சி சொல்லாமல் ஓடிவிட்டார். வருமானவரித் துறையினர் தகுந்த ஆதாரத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர்மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னதால் கையும் களவுமாக பிடித்துள்ளது. இந்த ஊழலில் இருந்து தப்பிக்க வழி செய்தால் அது மத்திய அரசின் அயோக்கியத்தனம். அதேநேரத்தில் முதல்வர் மீது கவர்னரிடம் தி.மு.க கொடுத்த ஊழல் புகார் பொய்யாக இருந்தால் தி.மு.க மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...