கோவை: முதல்வரின் ஊழல் குறித்து ஆளுநரிடம் தி.மு.க கொடுத்த புகார் பொய்யாக இருந்தால், தி.மு.க மீது வழக்கு தொடரலாம் என்று பொள்ளாச்சியில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
கோவை: முதல்வரின் ஊழல் குறித்து ஆளுநரிடம் தி.மு.க கொடுத்த புகார் பொய்யாக இருந்தால், தி.மு.க மீது வழக்கு தொடரலாம் என்று பொள்ளாச்சியில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
பொள்ளாச்சியில் தி.மு.க நெசவாளர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது கலைஞர் கருணாநிதி மீதும், அமைச்சர்கள்மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா? என அ.தி.மு.கவிடம் சவாலாகக் கேட்கிறோம். சர்க்காரியா கமிஷனில் ஊழல் எனக் கூறிய எம்.ஜி.ஆர் சாட்சி சொல்லாமல் ஓடிவிட்டார். வருமானவரித் துறையினர் தகுந்த ஆதாரத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர்மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னதால் கையும் களவுமாக பிடித்துள்ளது. இந்த ஊழலில் இருந்து தப்பிக்க வழி செய்தால் அது மத்திய அரசின் அயோக்கியத்தனம். அதேநேரத்தில் முதல்வர் மீது கவர்னரிடம் தி.மு.க கொடுத்த ஊழல் புகார் பொய்யாக இருந்தால் தி.மு.க மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொள்ளாச்சியில் தி.மு.க நெசவாளர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது கலைஞர் கருணாநிதி மீதும், அமைச்சர்கள்மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா? என அ.தி.மு.கவிடம் சவாலாகக் கேட்கிறோம். சர்க்காரியா கமிஷனில் ஊழல் எனக் கூறிய எம்.ஜி.ஆர் சாட்சி சொல்லாமல் ஓடிவிட்டார். வருமானவரித் துறையினர் தகுந்த ஆதாரத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர்மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னதால் கையும் களவுமாக பிடித்துள்ளது. இந்த ஊழலில் இருந்து தப்பிக்க வழி செய்தால் அது மத்திய அரசின் அயோக்கியத்தனம். அதேநேரத்தில் முதல்வர் மீது கவர்னரிடம் தி.மு.க கொடுத்த ஊழல் புகார் பொய்யாக இருந்தால் தி.மு.க மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.