கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 38 மற்றும் 39வது வார்டுகளில் கூடுதலாக பொதுக்கழிப்பிடங்கள் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 38 மற்றும் 39வது வார்டுகளில் கூடுதலாக பொதுக்கழிப்பிடங்கள் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 38 மற்றும் 39வது வார்டுகளில் உள்ள ஏ.டி காலனி, எல்லை தோட்டம் ரோடு, நேரு நகர் வீதிகள், பயனீர் மில் ரோடு, சிஎம்சி காலனி, பொறிக்கடை சந்து உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களில் 40 சதவீத வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுக்கழிப்பிடங்களை கூடுதலாக கட்டித்தரக் கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பீளமேடு பகுதி ம.தி.மு.க செயலாளர் வெள்ளியங்கிரி மாநகராட்சி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், சி.எம்.சி காலனி, எல்லை தோட்டம் ரோடு சந்திப்பு, பொறிக்கடை சந்து, வெங்கலம் குட்டை பகுதியில் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நான்கு இடங்களில் மட்டுமே பொதுக்கழிப்பறை உள்ளது. கழிப்பிட வசதி போதுமானதாக இல்லாததால் பீளமேடு பாரதி காலனி பகுதியில் உள்ள காட்டு பகுதியை இங்கு வசிக்கும் மக்கள் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக உபயோகப்படுத்தி வருகிறார்கள். எனவே, மாநகராட்சி நிர்வாகம் இதை ஆய்வு செய்து உரிய முறையில் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 38 மற்றும் 39வது வார்டுகளில் உள்ள ஏ.டி காலனி, எல்லை தோட்டம் ரோடு, நேரு நகர் வீதிகள், பயனீர் மில் ரோடு, சிஎம்சி காலனி, பொறிக்கடை சந்து உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களில் 40 சதவீத வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுக்கழிப்பிடங்களை கூடுதலாக கட்டித்தரக் கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பீளமேடு பகுதி ம.தி.மு.க செயலாளர் வெள்ளியங்கிரி மாநகராட்சி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், சி.எம்.சி காலனி, எல்லை தோட்டம் ரோடு சந்திப்பு, பொறிக்கடை சந்து, வெங்கலம் குட்டை பகுதியில் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நான்கு இடங்களில் மட்டுமே பொதுக்கழிப்பறை உள்ளது. கழிப்பிட வசதி போதுமானதாக இல்லாததால் பீளமேடு பாரதி காலனி பகுதியில் உள்ள காட்டு பகுதியை இங்கு வசிக்கும் மக்கள் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக உபயோகப்படுத்தி வருகிறார்கள். எனவே, மாநகராட்சி நிர்வாகம் இதை ஆய்வு செய்து உரிய முறையில் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.