கோவை: கோவை இரத்தினபுரியில் ரூ.2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.
கோவை: கோவை இரத்தினபுரியில் ரூ.2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

கோவை டிக 14 கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவி ராமசாமி தெருவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் 15 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ 2.38 கோடி செலவில் 10986 சதுர அடியில் 4 மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. போலீஸ் ஹவுசிங் கார்பரேசன் சார்பில் இது கட்டப்படுகிறது.
இந்த நிலையில், இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கலந்து கொண்டு முதல் செங்கலை எடுத்து வைத்து தொடங்கி வைத்தார்.

இதில் துணை காவல் ஆணையர் ஸ்டாலின், உதவி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி, தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்பொரேஷன் செயற்பொறியாளர் எஸ் வி சேகர், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், பொறியாளர் கலைக்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவை டிக 14 கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவி ராமசாமி தெருவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் 15 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ 2.38 கோடி செலவில் 10986 சதுர அடியில் 4 மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. போலீஸ் ஹவுசிங் கார்பரேசன் சார்பில் இது கட்டப்படுகிறது.
இந்த நிலையில், இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கலந்து கொண்டு முதல் செங்கலை எடுத்து வைத்து தொடங்கி வைத்தார்.
இதில் துணை காவல் ஆணையர் ஸ்டாலின், உதவி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி, தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்பொரேஷன் செயற்பொறியாளர் எஸ் வி சேகர், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், பொறியாளர் கலைக்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.