கோவை ரத்தினபுரியில் ரூ.2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம்..! மாநகர காவல் ஆணையர் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்!

கோவை: கோவை இரத்தினபுரியில் ரூ.2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.


கோவை: கோவை இரத்தினபுரியில் ரூ.2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



கோவை டிக 14 கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவி ராமசாமி தெருவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் 15 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ 2.38 கோடி செலவில் 10986 சதுர அடியில் 4 மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. போலீஸ் ஹவுசிங் கார்பரேசன் சார்பில் இது கட்டப்படுகிறது.

இந்த நிலையில், இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கலந்து கொண்டு முதல் செங்கலை எடுத்து வைத்து தொடங்கி வைத்தார்.



இதில் துணை காவல் ஆணையர் ஸ்டாலின், உதவி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி, தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்பொரேஷன் செயற்பொறியாளர் எஸ் வி சேகர், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், பொறியாளர் கலைக்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...