கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


கோவை: திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என்றும், கட்சி நிர்வாகம் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்தார். மேலும், திமுகவில் சாமானிய தொண்டர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா கட்டுமானப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இது தொடர்பாக தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் திமுகவைச் சேர்ந்த பல கவுன்சிலர்களும், கட்சி நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்து விலக உள்ளதாகவும் பாபு தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...