தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, பாரம்பரிய உணவுகள் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கோவை:

சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றும் தீர்மானம் 1967ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் சட்டப்பேரவையில் முன்வைத்து நிறைவேற்றப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியின் மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில், தமிழரின் பாரம்பரியம், தமிழ்நாட்டின் பெருமை, பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், பாரம்பரிய உணவுகளின் சிறப்பு, உணவுத் திருவிழா மற்றும் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரத்னா குழும நிறுவனங்களின் இயக்குநர் சித்ரா பழனியப்பன் மற்றும் அன்னை கஸ்தூரிபாய் மகளிர் மற்றும் நுகர்வோர் நலச்சங்கத்தின் செயலாளர் மகாலட்சுமி சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழர் பண்பாடு, கலாச்சாரம், சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேய சேவையின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினர்.



கல்லூரி அறங்காவலர்கள் கனகவள்ளி சண்முகநாதன், நிர்மலா ராஜசபாபதி, கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...