தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, பாரம்பரிய உணவுகள் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கோவை:

சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றும் தீர்மானம் 1967ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் சட்டப்பேரவையில் முன்வைத்து நிறைவேற்றப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியின் மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில், தமிழரின் பாரம்பரியம், தமிழ்நாட்டின் பெருமை, பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், பாரம்பரிய உணவுகளின் சிறப்பு, உணவுத் திருவிழா மற்றும் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரத்னா குழும நிறுவனங்களின் இயக்குநர் சித்ரா பழனியப்பன் மற்றும் அன்னை கஸ்தூரிபாய் மகளிர் மற்றும் நுகர்வோர் நலச்சங்கத்தின் செயலாளர் மகாலட்சுமி சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழர் பண்பாடு, கலாச்சாரம், சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேய சேவையின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினர்.



கல்லூரி அறங்காவலர்கள் கனகவள்ளி சண்முகநாதன், நிர்மலா ராஜசபாபதி, கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...