கோவை: கொரோனா தடைகள் அமாவாசையன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
கோவை: கொரோனா தடைகள் அமாவாசையன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையன்று அதிக அளவில் வருவது வழக்கம்.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான அமாவாசை பூஜைகள் நேற்று நடந்தது. வழக்கமாக ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் குவிவது வழக்கம். பக்தர்கள் வருகைக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
ஆனால், கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த சில மாதங்களாக அமாவாசை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் இருப்பதால், அமாவாசைக்கு முந்திய நாள் இரவு கோயில் நடை மூடப்பட்டது. இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசித்துச் சென்றனர்.